புதுக்கோட்டை எப்பொழுது புதுகை ஆனது?
புதுகைத் தென்றல் இதழ் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை முகவரியிலிருந்து வருகிறது. இந்த இதழின் ஆசிரியர் புதுகைத் தென்றல் மு.தர்மராசன் அவர்கள் புதுக்கோட்டைக்காரர். இவரது இணையர் பேரா. பானுமதி தர்மராசன் எழுத்தாளர். இருவரும் எண்பது வயதை நெருங்கியதை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் எழுத்துப் பணியைப் பாராட்டி புதுக்கோட்டையில் முத்து விழா எடுக்கப்பட்டது. இவ்விழாவில் இணையருக்கு நூல் பொன்னாடை வழியே கௌரவித்து உரையாற்றினேன்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை புதுகையான காலக்கட்டத்தை ஒரு செய்தியாகப் பகிர்ந்துகொண்டேன். இந்தச் செய்தியைக் கட்டுரையாக எழுதித் தர கேட்டிருக்கிறார்,,,நன்றி - திரு. சத்தியராம் இராமுக்கண்ணு ( செயலர் உலகத் திருக்குறள் பேரவை )



.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக