வேலிகள் காப்பதில்லை - நூலுக்கான அணிந்துரை
ச ொல்லுளி கவிஞர் வால் பிடித்து வாழத் தெரியாத, கால் பிடித்தும் வாழத் தெரியாத திரு. ம. விஜயன் அவர்களை மேடையில் இரு கைகளையும் நீட்டி சிம்மக்குரலில் முழங்கும் போராட்ட கனலராக பார்த்திருப்பீர்கள். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கை அரசியலும் அரசியல்களமும் இவரை அப்படியாக சுவீகரித்துக்கொண்டது. இவரை நான் ஒரு நாளும் இந்தளவில் மட்டுமே பார்த்ததில்லை. விஜயன் ஒரு கவிஞன். எப்பொழுதும் கவிதைமனம் கொண்டிருப்பவர். இதை இவரிடம் நெருங்கி பழகியவர்களால் மட்டுமே அவதானிக்க முடியும். இவர் பள்ளத்தான்மனை எனும் கவித்துவ ஊரில் பிறந்தவர். மேடுகளைக் கரைத்து பள்ளத்தை நிரப்பி வாழும் பரப்பை சமப்படுத்துபவர்கள் வாழும் மனையே பள்ளத்தான்மனை. ஊரின் இயல்புகேற்ப இவரது பேச்சு, மூச்சு, மொழியில் சமத்துவம் வேர்க்கொண்டிருப்பதுடன் கவிமனம் சாரல் கொண்டிக்கிறது. புதுக்கோட்டை இன்றைக்கும் கவிக்கோட்டைதான். அந்தளவிற்கு எண்ணிக்கையாலும் செறிவாலும் கவிப்பரப்பு கொண்ட நிலம். தற்கால புதுக்கோட்டை படைப்பாளர்களில் முதலில் நூல் வெளியிட்டவர்கள் யாரெல்லாமென்று புள்ளி விபரமெடு...