இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதி உரை - அனுபவம்

படம்
செப்டம்பர் 24, தேவக்கோட்டையில் பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 63 ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழா நடைபெற்றது. இரண்டு அமர்வுகள் கொண்ட ஒரு நாள் நிகழ்வு. முற்பகல் அமர்வுக்கு அடியேன் சிறப்புரை.  மாலை அமர்வுக்கு தவத்திரு பொன்னம்பலம்  அடிகளார் அவர்கள். மண்டபம்  நிறைந்த அரங்கில்  சிறப்புரையாற்றுவது இதுவே முதல் வரை. ' பாலகருக்குப் பாரதி' எனும் தலைப்பில் உரையாற்றினேன். இத்தலைப்பை மூன்று கூறுகளாகப் பொருள் காண முடியும். பாலர் வயதில் பாரதி. இன்றைய பாலருக்குப் பாரதி. பாலர் என்றால் விபின் சந்திரபாலரைக் குறிக்கும்.  1908 ஆம் ஆண்டு சென்னை வந்த பாலர் அவர்கள் பத்து நாட்கள் தங்கி ஆறு கூட்டங்களுக்கும் மேல்  உரையாற்றியுள்ளார்.  பாலர் உடனான பாரதி என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு. நான் இன்றைய பாலருக்குப் பாரதி சொல்லும் செய்தி எனும் பொருளில் உரையாற்றினேன்.  பாரதியின் ஞான ரதம், சின்னச் சங்கரன் கதை, பாப்பாப் பாட்டு, நந்தலாலா, அந்தரடிச்சான் ஸாகிப் ஆகிய படைப்புகளிலிருந்து பாரதி குறித்து உரையாற்றினேன். பாரதி படைத்த கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்த ...

பாரதியாரோடு பேசப்படாத இரண்டு ஊர்கள்

படம்
  பாரதியாரோடு பேசப்படாத இரண்டு ஊர்கள் மணப்பாறை தொன்மைமிகு மணவை தமிழ்மன்றம் சார்பில் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. தலைமை -திரு. சௌமா ராஜாங்கம் அவர்கள். வரவேற்பு - மன்றச் செயலர் திரு. நவமணி அவர்கள். இந்நிகழ்வில் வாழ்வும் இலக்கியமும் எனும் தலைப்பில் உரையாற்றினேன்.  செப்டம்பர்,11 மகாகவி பாரதியாரின் நினைவு நாள் என்பதால் பாரதி குறித்து சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டேன்.  பாரதியோடு தொடர்புடைய ஊர்களாக எட்டையபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, காசி, மதுரை சேதுபதி பள்ளி , காரைக்குடி கானாடுகாத்தான்,  சென்னை திருவல்லிக்கேணி ஆகிய ஊர்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. பாரதியோடு பேசப்படாத இரண்டு ஊர்கள் உள்ளன. அவை கடையம் மற்றும் காரைவாய்க்கால் கடையம் பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊர் கடையம். இவ்வூர் பாரதியாரின் வாழ்வில்  முக்கிய இடத்தைப் பெறுகிறது. பாண்டிச்சேரியில் பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கைக்காக பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்து பாரதியார் 1918 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட பாண்டிச்சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா திரும்புகிறார். அவ...