என் ஆசிரியரின் இதயம் பெரியது, நன்றியுடன் தலை வணங்குகிறேன்,,, தான் செய்யும் வேலைக்காக எத்தனை பரிசுகள், பாராட்டுகள் , விருதுகள் எனப் பெற்றாலும் தன் ஆசிரியரிடம் பெறும் பாராட்டும் பொன்னாடையும் மற்ற எல்லாவற்றையும் விடவும் மேலானது, என்றே உணர்கிறேன். நான் ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்கையில், தொழிற்நுட்பத்துறை விரிவுரையாளராக இருந்து எங்களை வழிநடத்தியவர், திரு. முனைவர் பெ. நடராஜன் அவர்கள். அப்பொழுதே அவருக்கென தனித்துவமான பண்புநலன்களைக் கொண்டிருந்தார். முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சியின் போது, பயிற்சி மாணவர்களின் கற்பித்தல் திறனை வீடியோவாக படமெடுத்து, மாநில அளவில் முன்மாதிரியாக ஒளிபரப்பு செய்தவர். பலரும் அவரவர் வகுப்பறைக்குள் கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள , நான் வகுப்பறைக்கும் வெளியே மாணவர்களை அழைத்துவந்து பள்ளி மைதானத்தில் நாடகத்துடன் மாதிரி வகுப்பு எடுத்ததையும், அதை அவர் படம்பிடித்து, சக ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பி பாராட்டியதையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் . தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவர் தற்போது மாவட்ட ஆசி...