இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நன்றி கரிசல் இலக்கிய விழா

படம்
கரிசல் மண்ணையும் கரிசல் இலக்கியத்தையும் தொடர்ந்து நான் என் நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்து வருகிறேன். இதுவரை உத்தேசமாக  120 கதைகள் எழுதியிருக்கிறேன். சுமாரான, பரவாயில்லை எனும் படியான, புதிய வடிவிலான, பரிசோதனை முயற்சியிலான, தமிழகம் அளவிலும் உலகளாவிய அளவிலும் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகள்,.. இதற்குள் அடங்கும். நண்பரே, படைப்புக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, படைப்பின் தரம்தான் முக்கியம்.  மௌனி எவ்வளவு கதைகள் எழுதினார்? சொற்பம்தான்! பேசப்படுகிறார் அல்லவா! கரிச்சான்குஞ்சு படைத்தது ஒன்றே ஒன்றுதான், பசித்த மானுடம். காலம் கடந்து நிற்கிறதே! ப. சிங்காரம் புயலிலே ஒரு தோனி, புயலுக்கு அப்பால் எனும் இரண்டு நாவல்களே எழுதினார். இன்றைக்கு வரைக்கும் பேசப்படுகிறதே,..அப்படி. இந்த விமர்சனத்தை நான் மறுத்ததில்லை! ஒரு நண்பர் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எழுதினார். பன்றி குட்டிப் போடுவதைப் போல சிலர் நூல்கள் போடுகிறார்கள். சிங்கம் குட்டி போடுவதைப் போல ஒன்று போட்டாலும் தரமான ஒரு குட்டியாகப் போட வேண்டும், என்று. இந்த விமர்சனம் எனக்காக எழுதியது அல்ல. இந்த விமர்சனத்தோடும் என் படைப்புகளை பொருத்தி பார்த்...

1000 தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி

 இப்படம் டி.ஆர். சுந்தரம் இயக்கினார். திரைக்கதை வசனம் எழுதியவர் பாரதிதாசன்.  ஆனால் பட்டத்தில் பெயர் இடம்பெறவில்லை.  ஒரு துறவி என் ஆசையெல்லாம் நிறைவேற வேண்டும் என்கிறார். அதற்கு ஆயிரம் தலைகள் வேண்டும் என்கிறது பூதம்  அவ்வளவு தலைகளுக்கு நான் எங்கே போவேன்  ஆதித்தபுரி மன்னன் மகள் ஆபூர்வ சிந்தாமணியை அணுகு  துறவிக்கு சீடனாகிறாள் ஆபூர்வ சிந்தாமணி.  ஒரு நாள் அவளுக்குத் திருமணம்.  அழகில் மயங்கி பலரும் வருகிறார்கள்.மூன்று கேள்விகள் கேட்கிறாள் . தெரியாதவர்களின் தலை கொய்யப்படுகிறது. கடைசியில் இளவரசன் மெய்யழகு வருகிறான்.

மறைக்க முடியாத மூன்று விசயங்கள் ?

 மூன்று விசயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. சூரியன் , சந்திரன் , உண்மை 

மிகப் பெரிய துன்பம், இன்பம் எது?

 உடல் முதுமையாகவும் மனம் இளமையாகவும் இருப்பது மிகப்பெரிய துன்பம். மகாபாரத கதையில் யயாதி இதற்கு தகுந்த உதாரணம். உடல் இளமையாகவும் மனம் முதுமையாகவும் இருப்பது மிகப்பெரிய வரம். அதைநோக்கி முயல்கிறேன்.

சிற்ப கைகள்

 கடக முத்திரை அபய முத்திரை கடி முத்திரை காதுகளில்  மகர ,பத்ர குண்டலம்  மார்பில் கச்சை  இடையில் இடையாடை 

இலுப்பை

 அரியலூர் மாவட்டத்தில் இலுப்பையூர் எனும் ஊர் இருக்கிறது.

ஜிகார்னிக் எபெக்ட்

  வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்தோமா இல்லையா என்று யோசிக்க வைப்பது ஜிகார்னிக் எஃபெக்ட் என்று பெயர். ஜிகார்னிக் என்ற பெண்மணி லித்துவேனிய சோவியத் நாட்டு உளவியல் அறிஞர். இவர் ஒரு முறை உறவினருடன் உணவகம் சென்றார். சாப்பிட்டு வெளியேறிய பிறகு பையை வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. திரும்பிச் சென்று தேடுகையில் அந்த சர்வருக்கு இவரைத் தெரியவில்லை. ஏன் மறந்தார் எப்படி மறந்தார் என்று தேடி ஆய்வு செய்தார். இதுவே ஜிகார்னிக் எபெக்ட். ஒரு வேலை முடிந்துவிட்டால் அந்த வேலையை மூளை மறந்துவிடும். அதை நினைவுப்படுத்துவதற்காக சில நுட்பங்களை நாவலில் பயன்படுத்த வேண்டும்.

ஜனநாயகம் என்பது

 ஜனநாயகம் என்பது கட்டி முடிக்கப்பட்டு முழுமை பெற்ற ஒரு கட்டடம் போன்றது அல்ல. அது அவ்வபோது புதுப்பிக்கப்பட்டு நவீனத் தோற்றங்களுக்கு  மாறிக்கொண்டே இருக்கும் ஒரு மாளிகை -20.11.2024 நாளிட்ட விகடன் இதழில் யோகேந்திர யாதவ் எழுதிய கடைசி பத்தி.

தாயின் பெயரில் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா?

 இந்திரா சௌந்தராஜன்