இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திமுகவும் எனது முதல் நூலும்!!

படம்
  திமுக இளைஞரணி சார்பில் கந்தர்வகோட்டையில் ஒரு நூலகம் திறக்கப்பட்டிருக்கிறது.  மார்ச் 16 அன்று திறக்கப்பட்ட இந்நூலகம்  இன்றுதான் (22.05. 2024) எனக்குத் தெரியவந்தது. சின்ன நூலகம், ஆபூர்வ நூல்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார், அண்ணல் அம்பேத்கர் மொத்த தொகுப்பு நூல்கள் கொண்ட நூலகம். நான் எழுதிய இரண்டு நூல்கள்கூட அதில் இடம்பெற்றிருந்தன. சொல்லேர், தடக்கை. எனது எழுத்துப் பயணத் தொடர்ச்சியில் திமுகவுக்கு சிறுபங்கு இருக்கிறது.  இது நடந்தது ஏப்ரல் 1, 2014. முட்டாள் தினத்தை முன்னிட்டு தினமணி இதழில் ' முட்டாள்களின் கீழ் உலகம் ' என்றொரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை இதழில் ஒரு பக்கம் முழுமையும் பிரசுரமாகியிருந்தது. கட்டுரையின் கீழே கந்தர்வகோட்டை முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்கள்  டெல்லியில் இருந்தபடி இக்கட்டுரையை வாசித்து யாரிடமோ எனது அலைபேசி எண்ணைக் கேட்டுவாங்கி என்னைத் தொடர்புகொண்டார். டெல்லியிலிருந்து பேசுவதாகச் சொல்லி கட்டுரைக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். நானும் கந்தர்வகோட்டைதான் என்றார். நான்...

பசி, தாகம் இரண்டில் எது கொடிது?

படம்
  ஓர் எழுத்தாளர் இறந்துபோகிறார். அந்த துக்க நிகழ்வுக்கு  அவர் தன் கதைகளில் படைத்த கதாபாத்திரங்கள் எல்லாம் வருகைதந்து  அஞ்சலி செலுத்துகிறார்கள். எழுத்தாளர் - கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்வு முதலும் கடைசியுமாய் இங்கேதான் நடந்தேறுகிறது. எழுத்தாளர் இறந்துதான்  கதாபாத்திரங்கள் அவரைச் சந்திக்க வேண்டுமா? பசி எனும் நவீன நாடகத்தில் எனது மிடற்றுத் தாகம்   சிறுகதை பாத்திரங்கள் உயிர்பெற்று என் முன்னே கொஞ்சநேரம் வாழ்ந்து மறைந்துள்ளதாக உணர்கிறேன்.  தாகம் என்பது இங்கே பசியாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.  உயிர்களைப் பெரிதும் வதைப்பது பசியா, தாகமா? ஒரு பச்சிளம் குழந்தைக்குப் பசி என்பது தாகமாக இருக்கிறது. ஒரு வயோதிகருக்கு தாகம் என்பது பசியா இருக்கிறது. கொடிது பசியா, தாகமா? இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் பிராண நிறக் கனவு நூலிலுள்ள மிடற்றுத் தாகம் எனும் கதையை வாசித்து உணர வேண்டுகிறேன். " பிரபஞ்சத்தின் உயிர்கள் யாவும் மறுக்க இயலா நிஜம் பசி உயிர் தழைத்த நொடியே ஜனனம் கொண்ட பசி பூமியில் உணவுக்காய் அலைந்து நகர்கிறது உயிர்களெல்லாம்...

குழந்தை வைக்கும் தண்ணீருக்குக் குருவிகள் ஏன் அதிகம் வருகின்றன?

படம்
  புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் நடத்திய அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா நினைவு இலக்கிய பரிசளிப்பு விழாவின் சிறப்புகள் குறித்துப் பேச எழுத பல விடயங்கள் இருக்கின்றன. இந்த விழாவிற்கு ஒரு பங்கேற்பாளனாக முதல் ஆளாக சென்றிருந்தேன். விழா மேடை, இருக்கைகள், மேளக்கச்சேரி, மெல்லிசை, புத்தகக் கண்காட்சி, விருதாளர்கள்,  சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பரிவட்டம், பூமாலை, கவித்துவமான வரவேற்புரை, தொகுப்புரை, நோக்கவுரை, தலைமையுரை, பாராட்டுரை, சிறப்புரை, ஏற்புரை, நன்றியுரை,  விருந்து உபசரிப்பு என்று எல்லா வகையிலும் விழா சிறப்புற்றிருந்தது. தமிழ்ச்சங்கத் தலைவர் தனது உரையை, இந்த விழாவில் இளைய தலைமுறையினர் குறைவாக இருப்பதை கவலையாகக் குறிப்பிட்டு தொடங்கியதும் விழாத் தலைவர் வாழும் காலத்திலேயே எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதும்,  கவிச்சுடர் அவர்கள் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள்  சாதியமதவாதிகளிடம் எச்சரிக்கையாக  இருக்கவேண்டுமென குறிப்பிட்டு உரையை நிறைவு செய்ததையும் முக்கிய அம்சமாக பார்க்கிறேன். பாராட்டுரை, சிறப்புரைகள் நல்ல முன் தயாரிப்போடு இருந்தன. இவ்வளவு சிறப்...