இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கிய உரை - எழுத்தாளருக்கு மூன்று படித்துறைகள்

படம்
@ அண்டனூர் சுரா    அனைவருக்கும் வணக்கம். ஓர் அறிமுக எழுத்தாளனின் முதல் நூல் இப்படித்தான் இருக்கும் என்கிற கருத்து தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கிறது. முதல் நூல் வெளியீட்டு விழா இப்படியெல்லாம் நடக்கும் என்கிற புரிதல்  இருக்கிறது. முதல் நூலுக்கான திறனாய்வு கூட்டம் இந்த அளவில்தான்  நடக்குமென்று ஒரு கருதுகோள் இருக்கிறது. இவ்வளவையும் தகர்த்து இந்த நூல் வெளியீட்டு விழா  ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்குரிய விழாவாக நடந்துகொண்டிருக்கிறது.   சராசரியாக இலக்கியக் கூட்டத்திற்கு கூடும் கூட்டத்தை விடவும் திரளான கூட்டம் இது. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு ‘சிலுக்கு தேவதை’ எனும் நூலின் பெய ரும் ஒரு காரணம் என்று கருதுகிறேன். அன்பு நண்பர் கவிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஒரு மாதத்திற்கும் முன்பு என்னிடம் தொடர்புகொண்டு  நிலா மகன் சிறுகதைத் தொகுப்பு கொணர்ந்திருக்கிறார். நீங்கள் வந்து வெளியிட்டு சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். நான் மட்டுமல்ல, யாரும் அஷரப் அலியின் வேண்டலைத் தட்ட முடியாது. சிலுக் கண்களிலிருக்கும் ஒரு விதமான காந்தமும் சிலுக் நடனத்தின் நளினமும் அஷரப் அலியின் குரலில...

சொற்களில் வாழ்கிறோம்

படம்
 @அண்டனூர் சுரா அனைவருக்கும் வணக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேடையில் முதல் புத்தகம் வெளியிட்ட ஒருவன் உங்கள் முன்னால் ஒரு எழுத்தாளனாக நின்றுகொண்டிருக்கிறேன். ஓர் எழுத்தாளனின் ஆகப்பெரிய இலக்கு, லட்சியம், ஆசை நிற்றல் என்பதுதான். காலத்தாலும் காலம் கடந்தும் வாசக பரப்பில் எழுத்தாக நிற்க வேண்டும். கற்பக விநாயகம் அறக்கட்டளை அறங்காவலர் திருமதி கவிதா சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்ச்செம்மல் ரமா. ராமநாதன், பாடலாசிரியர் தனிக்கொடி, கவிமதி சோலச்சி உள்ளிட்ட அறிவுசார் அவையை வணங்குகிறேன். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற எட்டாவது புத்தகத் திருவிழா இது.  ஒரு மாதக் காலமாகவே எட்டு என்பதும் எட்டாவது என்பதும் தொடர்ந்து உச்சரிப்பட்டு வருவதை கேட்கயில் மனதிற்கு இதமாக இருக்கிறது. காரணம் ஒரு காலம் வரைக்கும் எட்டு என்கிற சொல் அவ்வளவாக யாராலும் உச்சரிக்காத சொல்லாகவும் ஒதுக்கப்பட்ட சொல்லாகவும் இருந்தது. வயலில் விளையும் விளைபொருட்களை படி, மரக்காலில் அளப்பவர்கள் ஒன்று இரண்டு மூன்று அளப்பவர்கள் எட்டு வருகிற இடத்தில் எட்டுக்குப்...