முத்தமிழின் விழுமியங்கள்
அனைவருக்கும் வணக்கம், கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சிறப்பு என்பது அதன் அமைவிடம்தான். இந்தக் கல்லூரி கரம்பக்குடியின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மருதன்கோன்விடுதி எனும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. ஊர்ப்பெயர்களில் மரூஉக்கு உட்படாத ஊர் மருதன்கோன்விடுதி. இந்த ஊருக்கும் அருகிலுள்ள ஊர் மைலன்கோன்பட்டி, மேலங்கபட்டி என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் உண்மையான பெயர் மகிழ்நன்கோன்பட்டி. அதற்கும் அடுத்து அம்புக்கோவில் உள்ளது. அகநானூறு, மதுரைகாஞ்சி, புறநானூறு, சிலப்பதிகாரத்தில் அழும்பில் என்று பாடப்பட்ட ஊர்தான் அழும்பில்கோவில் என்றாகி தற்போது அம்புக்கோவில் என்றுமருவியுள்ளது. இன்னொரு புறம் கொத்தகப்பட்டி என்றார் ஊர் உள்ளது. இந்த ஊரிலிருந்துகூட நிறைய மாணவர்கள் படிக்கிறீர்கள். அந்த ஊர் நீண்ட ஏரிக்கரையில் அமைந்துள்ளது. ஏரியின் கரைக்கு கோட்டகம் என்று பெயர். சிலப்பதிகாரத்தில் இச்சொல் உள்ளது. கோட்டகம்பட்டி என்பதுதான் இன்று கொத்தகப்பட்டி என்று திரிந்துள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஊரிலிருந்து மாணவர்கள் படிப்பதால் இக்கல்லூரி வரலாற்று சிற...