இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகாகவி ஈரோடு தமிழன்பன் நூல் மீதான எனது உரை

படம்
அனைவருக்கும் வணக்கம், புதுக்கோட்டை வீதிகள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னால் ‘புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம்’ குறித்து கட்டுரை எழுதும் அளவிற்கு வீதி கலை இலக்கிய களம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வீதி இலக்கிய களத்திற்கு எனது வாழ்த்துகள்!! “வீணை வருவதற்கு முன்பு இசை இருந்த இடம்” என்கிற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் இந்தத் தலைப்பையொட்டியே யோசிக்கிறேன். வீதி கலை இலக்கிய களம் உருவாவதற்கு முன்பு வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா எங்கே இருந்தார்? அறிவொளி  இயக்கம் வருவதற்கு முன்பு கவிஞர் நா. முத்துநிலவன் எங்கே இருந்தார்? ஒருவேளை புத்தகம் என்கிற ஒன்று கண்டுபிடிக்காமல் போயிருந்தால்  கவிஞர் ஸ்ரீ மலையப்பன் பிறந்திருக்கக்கூட மாட்டாரோ? என்று. தம்பி ஸ்ரீ மலையப்பன் என்னை அலைபேசியில்  அழைத்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, அண்ணே ஈரோடு தமிழன்பனின் ஒரு நூல் குறித்து உங்கள் பார்வையை வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதை ஏன் சிரித்தபடி சொல்கிறார் என்று யோசித்தேன். காரணம் கிடைத்தது. கவிதைகளில் நகைச்சுவையைக் கொண்டுவந்தவர் ஈரோடு தமிழன்ப...

அழகனும் அழகிகளும் சில பல பார்வைகளும்

படம்
 அனைவருக்கும் வணக்கம் ,  மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்ட  நிகழ்வில் உரையாற்றுகிறேன்.  வணங்குகிறேன்.   எழுத்தாளர் ஆர். நீலா அவர்கள் எனக்கு வாலி போன்றவர் . எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய  ‘கொங்கை’ எனும் குறுநாவலுக்கு முதல் விமர்சனம் எழுதியவர் இவர்தான். அந்த நாவல்  மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.  என் மீது பாய்ந்த சொற்கணைகளின் பாதியை இவர் வாலியைப் போல தன் மீது ஏந்திக்கொண்டார். அதற்காக இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   ஆர்.நீலா அவர்கள் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். அவரது சமீப வரவு ‘அழகனும் அழகிகளும்’. இந்த நூல் குறித்த விமர்சனத்திற்கு நான் வந்துகொண்டிருக்கையில் தமுஎகச மாவட்டச் செயலர் தோழர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் இந்த நூல் குறித்து பேச உங்களுக்கான நேரம் பத்து நிமிடங்கள் என்று குறுந்தகவல் அனுப்பினார். அவர் கொடுத்திருக்கும் இந்த நேர அளவிற்குப் பதில் சொல்வதிலிருந்து இந்த நூலுக்கான விமர்சன உரையைத் தொடங்கலாமென இருக்கிறேன்.    அழக...

எல்லையில்லா வானம் - நூல் வெளியீட்டு தொடக்க உரை

படம்
அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டக் கிளையின் சார்பில் எழுத்தாளர் அன்னை சௌந்தராஜன் எழுதிய 'எல்லையில்லா வானம்' நூல் வெளியீட்டு விழாவும் அத்துடன் க.அஜய் எழுதிய 'மழையின் சாயலில்,,,' கவிதை நூல், ரேவதி ராம் எழுதிய 'நின்று கழிக்கும் வெயில்' கவிதைத் தொகுப்பு, மு.சிவானந்தம எழுதிய 'வழிபாட்டு விழாக்களில் தமிழர் மரபுகள்' கட்டுரை நூல் குறித்த திறனாய்வு கூட்டம் நடைபெறுகிறது. எனது உரைக்குப் பிறகு எல்லையில்லா வானம் எனும் நூல் வெளியிடப்படவிருக்கிறது. இந்த நூலினை இந்திய பொதுவுடைமை கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் த.செங்கோடன் அவர்கள் வெளியிட கவிஞர் கோ. கலியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொள்ளவிருக்கிறார். எல்லையில்லா வானம் என்பது மிகப்பெரிய சிந்தனை. எல்லாயில்லா வானத்தைக் காட்சிப்படுத்துவது எளிது. ஒரு வெள்ளைத்தாளில் ஒரு ஓரத்தில் சின்னதாக ஒரு பறவையை வரைந்தால் அந்த தாள் எல்லையில்லா வானமாகிவிடும். இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் சொன்னேன். தமிழ் இலக்கியம் மிக நீண்ட காலம் கடலாக இருந்தது. ஆழமும் பரந்த பரப்பையும் கொண்டிருந்தது.  தமிழ் இலக்...

எழுதுதல் என்பது சரியாக சிந்தித்தல்

படம்
இலக்கிய உரை @ அண்டனூர் சுரா அனைவருக்கும் வணக்கம்,   இந்த உலகில் ஒருவரைப் பேச வைத்து மற்றவர்கள் கேட்பது என்பது மனிதனின் முதல் கண்டுபிடிப்பான மொழிக்குச் செய்யும் மரியாதையாகவே இருக்க முடியும்.  அதிலும் உலகில் அதிக மக்களால் பேசப்படும் ஆங்கில மொழியாளர்களின் இலக்கிய கூடலில் தமிழ் எழுத்தாளன் ஒருவரை பேச வைத்து கேட்பது என்பது பறவைகளின் சரணாலயத்தில் எல்லா பறவைகளும் ஒரு கணம் தான் பாடுவதை நிறுத்தி இந்தப்  பூமியின் ஆதி குரலான காற்றின் மொழிக்குச் செவிமடுப்பதற்கு ஒப்பானதாகும். அதற்காக தஞ்சாவூர் இலக்கிய அறிஞர்கள் கூடலைத் (LITERARY SCHOLAR SOCIETY, THANJAVUR)' தலை வணங்குகிறேன்.   இந்த நிகழ்வில் பதினெட்டு சிறுகதைகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து  தொகுக்கப்பட்ட “ஏராளமான கதைகள் ( STORIES APLENTY – Tamil Short Stories in English Translation)” எனும் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றும்  இந்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன்.     இந்த நிகழ்வில் 'சிறுகதை எழுத்து அனுபவம்'  எனும் தலைப்பின்கீழ்  உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்தத் தலைப்பின்...