நன்றியும் வணக்கமும்
ஒரு மனிதன் ஒரு நாளில் வணக்கம், நன்றி இவ்விரு சொற்களையும் எத்தனை முறை பயன்படுத்துகிறார், எந்தளவு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து அவரது மாண்பு கணக்கிடப்படுகிறது. நான் பள்ளி, கல்லூரி பருவத்தில் வணக்கம் அதிகளவில் உச்சரித்திருக்கிறேன். நன்றியைத் தற்போதுதான் உணர்த்து பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இதிலிருந்து வணக்கம் என்பது குழந்தை மனம் கொண்டதாகவும் நன்றி என்பது மானுடத் தன்மை கொண்டதாகவும் புரிந்துகொண்டிருக்கிறேன். எனக்கு நேர் எதிர் நிலையில் இருக்கிறார் திருவள்ளுவர். இவர் வணக்கத்தை அதிகம் பயன்படுத்தவில்லை. நன்றியை அதிக அளவு பயன்படுத்தியிருக்கிறார். நன்றி நவில்தல் என்கிற சொல் இவரது பயன்பாட்டின் உச்சம். வணக்கம், நன்றி இரண்டும் பண்புப்பெயர்கள். சில இடங்களில் வினைச்சொல்லாவும் வினையாற்றுகிறது. வணங்குதல் என்பதே வணக்கம் ஆனது. நல்லது என்பதே நன்றும் நன்றியும் ஆனது. நன்றிக்கும் இன்றைய அரசியல் களத்தில் பேசும் பொருளாக இருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருக்குறளில் 108 ஆவது குறள் நன்றியைப் பாடுகிறது. நன்றி மறப்பது நன்றன்று. நிற்க, கடைசியாக நான் முத்த...