செம்பை மணவாளன் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு - தலைமை உரை
அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக்குழு முன்னெடுத்திற்கும் தோழர் சந்துரு படத்திறப்பு மற்றும் செம்பை மணவாளன் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவுக்கு அழைத்து வந்திருக்கின்ற உங்கள் இதயங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன். இரு கரங்களில் ஒன்று செயற்பாட்டாளர் சந்துரு என்கிற சந்திரசேகரனுக்கானது. மற்றொரு கரம் எழுத்தாளர் செம்பை மணவாளனுக்கானது. ஒரு நிகழ்வு, ஒரு விழா இரண்டும் ஒரு சேர நடைபெறுகிறது. பெருமன்றத்தின் மேனாள் மாவட்டச் செயலாளர் சந்துரு அவர்களின் படத்திறப்பு நிகழ்வாகவும் செம்பை மணவாளன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவாகவும் நடைபெறுகிறது. நிகழ்வும் விழாவும் ஒரேநேரத்தில் நடத்துவது சரியா என்கிற கேள்வி இங்கு எழலாம். சந்துரு , செம்பை மணவாளன் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்திற்கு வேறு வேறானவர்கள் அல்லர். இருவரும் வேர் ஆனவர்கள். அறிவியலின் இயக்கத்தில் அகவிசை, புற விசை என்று இரு விசைகள் இருக்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனும் பேரம...